ராமர் பாலம்: லோக்சபாவில் திமுக-பாஜகமீண்டும் மோதல்-அவை ஒத்திவைப்பு
டெல்லிசேது சமுத்திர திட்டம் குறித்து திமுக பாஜக எம்பிக்களுக்கு இடையே இன்றும் பெரும் அமளி ஏற்பட்டதால் லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.
லோக்சபாவில் இன்றைய கேள்வி நேரம் முடிந்ததும் பாஜகவினர் சேது சமுத்திர திட்டம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பை கொண்டு வந்தனர். இதற்கு பதிலளித்த கப்பல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் டிஆர் பாலு,
சேது சமுத்திர திட்டம் நடைபெற்று வரும் பகுதியில் எந்த ஒரு வரலாற்று நிகழ்வுகளும் நடக்கவில்லை. அங்கு மனிதனால் எந்தப் பாலமும் கட்டப்படவில்லை என்றார்.
இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் ராமர் பாலம் இருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த பாலு, ராமர் பாலத்தை மனிதர்கள் உருவாக்கியதற்கான எந்த அடையாளமும் இல்லை என அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
இதையடுத்து பாஜக எம்பிக்களுக்கும் திமுக எம்பிக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அவையில் பெரும் கூச்சலும், குழுப்பமும் நிலவியது.
இதையடுத்து சபாநாயகர் அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications