மதுரை கலவரம்-ராஜ்யசபாவில் அதிமுக வெளிநடப்பு
டெல்லி:நாடாளுமன்றத்தின் ராஜ்யசாவில் மதுரை வன்முறை சம்பவம் குறித்து பேச சபாநாயகர் அனுமதியளிக்காததால் அதிமுக வெளிநடப்பு செய்தது.
அதிமுகவுக்கு மக்களவையில் எம்பிக்கள் இல்லை. ராஜ்யசபாவில் 12 எம்பிக்கள் உள்ளனர்.
இன்று ராஜ்யசபாவில் கேள்வி நேரம் முடிந்ததும் அதிமுக உறுப்பினர் பி.ஜி. நாராயணன் எழுந்து, மதுரையில் தினகரன், சன் டிவி மீது நடந்த தாக்குதல், 3 பேர் கொலை செய்யப்பட்டது ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்றார்.
அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த துணை சபாநாயர் ரகுமான் கான், இது தொடர்பாக நீங்கள் கொடுத்த நோட்டீஸை சபாநாயகர் ஏற்கனவே நிராகரித்துவிட்டார். இதனால் இந்தப் பிரச்சனையை இப்போது கிளப்பாதீர்கள். இப்போது அதை விவாதிக்க முடியாது என்றார்.
இைதயடுத்து அதிமுக உறுப்பினருக்கும் துணை சபாநாயருக்கும் இது தொடர்பாக சிறிது நேரம் வாக்குவாதம் நடந்தது.
இதை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
நேற்று அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் டிஆர் பாலுவும் அதிமுகவினருடன் வாக்குவாதத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications