புலிகள் பிடியில் உள்ள மீனவர்களை மீட்ககோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:விடுதலைப் புலிகள் வசம் உள்ள 12 குமரி மாவட்ட மீனவர்களை மீட்டுத் தரக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில், 12 மீனவர்களும் விடுதலைப் புலிகள் வசம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர்களது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை. எனவே அவர்களை விரைவில் மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு கோரியுள்ளது.தமிழக மீனவர்கள் புலிகள் வசம்தான் உள்ளனர் என்பதற்கு ஆதாரமாக, கடலோரக் காவல் படையினரிடம் சிக்கிய 6 கடல் புலிகள் கொடுத்துள்ள வாக்குமூலத்தையும் தமிழக அரசு, மத்திய அரசுக்கு வழங்கியுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications