கத்தாரில் தமிழக மீனவர்கள் 34 பேர் விடுவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:கத்தாரில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 34 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சவுதி அரேபியாவில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த இந்திய மீனவர்கள் 7 படகுகளில் சில மாதங்களுக்கு முன் கத்தார் எல்லைக்குள் சென்றதால் சிறை பிடிக்கப்பட்டனர்.
கத்தாரிலுள்ள இந்திய தூதரகம் முயற்சியால் இந்திய மீனவர்கள் 34 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் பெரும்பாலோனோர் தமிழர்கள் ஆவர். தோகா நகரிலுள்ள தூதரக அலுவலகத்தில் மீனவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை மீண்டும் தங்கள் பணியில் சேர்க்க தூதரக அலுவலர்கள் மூலம் ஏற்பாடு நடந்து வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications