கருணாநிதியிடம் தேச பக்தர் பட்டத்துக்கு ஏங்கவில்லை-இராம.கேபாலன்
சென்னை:ராமர் பாலத்தை இடிக்க எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச துரோகிகள் என கூறும் முதல்வர் கருணாநிதியிடமிருந்து தேசபக்தர் பட்டம் வாங்க யாரும் தவிக்கவில்லை என இந்து முன்னணி மாநில அமைப்பாளர் இராம.கோபாலன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் கருணாநிதி, ராமர் பாலம் இடிப்பதை தடுப்பவர்கள் அனைவரும் தேச துரோகிகள் போலவும், இவர் மட்டும் பரம்பரை தேச பக்தர் போலவும் பேசியுள்ளார். இவரிடமிருந்து தேச பக்தர் பட்டம் பெற யாரும் தவிக்கவில்லை.
சென்னையில் நடந்த கருத்தரங்கில் ராமர் பாலத்தை இடித்தால் என்னவாகும் என பல்வேறுதுறை வல்லுனர்கள் பேசியது நமக்கு தெரியாது என்று முதல்வர் கருணாநிதி நினைக்கிறார்.
ராமர் பாலம் இல்லை, மணல்திட்டு தான் எனக் கூறும் கருணாநிதி கோஷ்டி கப்பல்களாலும், கருவிகளாலும் அதை உடைக்க முடியாததால் குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டுள்ளது ஏன்.
ராமர் பாலத்தை காக்க இளைஞர்கள் உயிரை பணயம் வைக்க தயாராக உள்ளனர். இந்த உண்மையை அதிகாரிகள் அவருக்கு தெரிவித்திருக்க மாட்டார்கள் போலும்.
விலைவாசி உயர்வு, பஞ்சம், வன்முறை என மக்கள் சிரமப்படுகின்றனர். இதை திசை திருப்பவே கருணாநிதி நாடகமாடுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications