தமிழ் மீது பாய்ந்த ஒரிஸ்ஸா எம்பி!!!
டெல்லிதமிழைத் தவிர மற்ற மாநில மொழிகளுக்கு ரயில்வே முக்கியத்துவம் தருவதில்லை என்று கூறி நாடாளுமன்றத்தில் இன்று பிரச்சனை கிளப்பப்பட்டது. இதனால் ஏற்பட்ட அமளியால் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று லோக்சபாவில் கேள்வி நேரம் முடிந்தவுடன் பிஜூ ஜனதா தளத்தை சேர்ந்த ஒரிஸ்ஸா எம்பி திரிபாதி எழுந்து ஒரு பிரச்சனையை கிளப்பினார்.
அவர் பேசுகையில், ரயில்வேயில் மும்மொழிக் கொள்கை முறையாகப் பின்பற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தான் ரயில்கள், ரயில் நிலையங்களில் தமிழிலும் எழுதுகிறார்கள். பிற மாநிலங்களில் ரயில்வே மாநில மொழிகளை மதிப்பதில்லை.
அதே போல பிற மாநிலங்களில் இருந்து கிளம்பும் ரயில்களில் அந்த ரயில் போய்ச் சேரும் ஊரின் பெயரை இந்தி, ஆங்கிலத்தில் தான் எழுதுகிறார்கள். ஆனால், அது தமிழ்நாட்டுக்குப் போகும் ரயிலாக இருந்தால் மட்டும் தமிழிலும் எழுதுகிறார்கள். அதே நேரத்தில் பிற தென் மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் அந்தந்த மாநில மொழியில் ஊர் பெயரை எழுதுவதில்லை என்றார்.
இதையடுத்து திரிபாதிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கோஷங்கள் எழுந்தன. இதனால் அவையில் பெரும் கூச்சல் நிலவியது.
சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தலையிட்டு, உங்களுக்கு அவையை நடத்த வேண்டும் என்ற எண்ணமில்லை என்று கூறி அவையை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications