For Daily Alerts
Just In
தர்மபுரி: இடி தாக்கி 70 ஆடுகள் பலி
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் இடி தாக்கியதில் 70 ஆடுகள் கருகி இறந்தன.
தர்மபுரி மாவட்டம் சென்றாயன்பட்டி என்ற கிராமத்தில் நேற்று பலத்த இடியுடன், சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது.
இதில் இடி தாக்கியதில் கிடையில் அடைக்கப்பட்டிருந்த 70 ஆடுகள் பரிதாபமாக கருகி இறந்தன. பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த கன மழைக்கு நன்கு விளைந்திருந்த மாம்பழத் தோட்டமும் சேதமடைந்தது.
இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பலத்த சூறாவளியுடன் கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
Comments
chennai tamil nadu thatstamil rain dharmapuri tamilnadu தர்மபுரி tamil news headlines goat கன மழை sheep local body election tn political breaking
Story first published: Monday, May 21, 2007, 5:30 [IST]