இடி தாக்கி விசைத்தறிக் கூடம் சாம்பல்:ரூ.12 லட்சம் ஜவுளி நாசம்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் இடி விழுந்து விசைத் தறிக் கூடம் தீப்பிடித்து எரிந்தது. இதில், ரூ. 12 லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து சாம்பலாயின.
திருப்பூரில் நேற்று மாலை இடியுடன் கூடிய கன மழை பெய்தது. அப்போது கலிப்பாளையத்தில் உள்ள பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான விசைத்தறிக் கூடத்தில் மின்னல் தாக்கியது.
இதில் விசைத்தறிகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த தீ விபத்தில், விசைத் தறிக் கூடத்தில் உள்ள ரூ.12 மதிப்புள்ள துணிகளும், மற்ற பொருட்களும் எரிந்து சாம்பலாயின.
மின்னல் தாக்கியதில் கூடத்தில் இருந்த அனைத்து பொருட்களும் தீப்பற்றி எரிந்தது. 28 விசைத்தறிகளில் 6 கருவிகள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது.












Click it and Unblock the Notifications