கட்டாய ஹெல்மெட்டுக்கு தடையில்லை:திட்டமிட்டபடி ஜூன் 1 முதல் அமல்
மதுரை: இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட 6 மாநகரங்களில் ஜூன் 1ம் தேதி முதலும், பிற பகுதிகளில் ஜூலை 1ம் தேதி முதலும், இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோரும், பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், மதுரை ஒத்தகடையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், கடந்த 1984ல், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அப்போது மருத்துவ நிபுணர் குழு ஒன்று ஹெல்மெட் அணிவதால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆராய்ந்தது.
அந்த ஆய்வின் இறுதியில், ஹெல்மட் அணிவதால், நரம்புகள் பாதிக்கப்படும் என அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து ஹெல்மட் அணிய வேண்டும் என்ற உத்தரவை அரசு திரும்பப் பெற்றது. அந்த மருத்து நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இதுவரை எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஹெல்மட் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருப்பது சரியல்ல. மேலும் மதுரை உள்ளிட்ட நகரங்களில் சாலைகள் மிகவும் மோசமானதாக இருப்பதால் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாது.
ஐஎஸ்ஐ தர நிர்ணய கட்டுபாட்டு அமைப்பு ஹெல்மெட் அணிந்து செல்லும்போது கடுமையான விபத்துகள் ஏற்பட்டால் உயிரை பாதுகாத்து கொள்ளலாம் என உறுதியளிக்க முடியாது என தெரிவித்துள்ளதால் இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என குறிப்பிடபட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி மிஸ்ரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசு மக்கள் கருத்தை கேட்காமல் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. இதனால் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் குழு கூறியுள்ளது. எனவே ஹெல்மெட் அணிவதை அவரவர் விருப்பதிற்கு விடவேண்டும். இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என வாதாடினார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெசி ஜீவப்பிரியா, இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு விபத்து ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவே அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதால் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மிஸ்ரா, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவை ரத்து செய்ய எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்து மனுவைத் தள்ளுபடி செய்தார்.
-
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications