கட்டாய ஹெல்மெட்டுக்கு தடையில்லை:திட்டமிட்டபடி ஜூன் 1 முதல் அமல்
மதுரை: இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட 6 மாநகரங்களில் ஜூன் 1ம் தேதி முதலும், பிற பகுதிகளில் ஜூலை 1ம் தேதி முதலும், இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோரும், பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், மதுரை ஒத்தகடையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், கடந்த 1984ல், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அப்போது மருத்துவ நிபுணர் குழு ஒன்று ஹெல்மெட் அணிவதால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆராய்ந்தது.
அந்த ஆய்வின் இறுதியில், ஹெல்மட் அணிவதால், நரம்புகள் பாதிக்கப்படும் என அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து ஹெல்மட் அணிய வேண்டும் என்ற உத்தரவை அரசு திரும்பப் பெற்றது. அந்த மருத்து நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இதுவரை எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஹெல்மட் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருப்பது சரியல்ல. மேலும் மதுரை உள்ளிட்ட நகரங்களில் சாலைகள் மிகவும் மோசமானதாக இருப்பதால் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாது.
ஐஎஸ்ஐ தர நிர்ணய கட்டுபாட்டு அமைப்பு ஹெல்மெட் அணிந்து செல்லும்போது கடுமையான விபத்துகள் ஏற்பட்டால் உயிரை பாதுகாத்து கொள்ளலாம் என உறுதியளிக்க முடியாது என தெரிவித்துள்ளதால் இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என குறிப்பிடபட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி மிஸ்ரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசு மக்கள் கருத்தை கேட்காமல் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. இதனால் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் குழு கூறியுள்ளது. எனவே ஹெல்மெட் அணிவதை அவரவர் விருப்பதிற்கு விடவேண்டும். இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என வாதாடினார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெசி ஜீவப்பிரியா, இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு விபத்து ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவே அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதால் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மிஸ்ரா, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவை ரத்து செய்ய எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்து மனுவைத் தள்ளுபடி செய்தார்.
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications