பெண்களை குளிக்க விடாமல் தடுத்தததாகவைகுண்டராஜன் மீது புது வழக்கு
மதுரை:கடலில் குளிக்க விடாமல் பெண்களைத் தடுத்ததாகவும், கொலை முயற்சிக்குத் தூண்டியதாகவும், ஜெயா டிவி பங்குதாரரும், தொழிலதிபருமான வைகுண்டராஜன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் வைகுண்டராஜனுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை முன்ஜாமீன் வழங்கியது.
நெல்லை மாவட்டம் கீரைக்காரன் தட்டு பகுதியைச் சேர்ந்தவர் வைகுண்டராஜன். இவர்தான் ஜெயா டிவியின் முக்கியப் பங்குதாரர் என சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருந்தார்.
இதன் காரணமாக, திமுக அரசு வைகுண்டராஜனை மிரட்டி ஜெயா டிவி பங்குகளை வாங்கி, டிவியை முடக்க நினைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
சமீபத்தில் வைகுண்டராஜனின் தாது மணல் பிரித்தெடுக்கும் நிறுவனங்களில் கனிம வளத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் வைகுண்டராஜன் மீது புதிதாக ஒரு வழக்கு நெல்லை மாவட்டம் கருங்கல் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது.
கடந்த 18ம் தேதி சிலோன் மணி, எடிசம்மாள், வல்சம்மாள், சுசிந்தா ஆகிய பெண்கள் கருங்கல் பகுதி கடற்கரையில், கடலில் குளிக்கச் சென்றனர்.
அப்போது வைகுண்டராஜனுக்குச் சொந்தமான வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் அவர்களை குளிக்க விடாமல் தடுத்து, கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்களாம். இதுதொடர்பாக வந்த புகாரைத் தொடர்ந்து கருங்கல் போலீஸார், வைகுண்டராஜன் மீது பெண்களைக் குளிக்க விடாமல் தடுத்ததாகவும், கொலை முயற்சிக்குத் தூண்டியதாகவும் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து வைகுண்டராஜன் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், என் மீது போலீஸார் பொய்யான வழக்கைப் போட்டு கைது செய்யத் துடிக்கின்றனர்.
நான் வருமான வரி கட்டுபவன். கைது செய்யப்பட்டால் எனது கெளரவம் பாதிக்கப்படும். சட்டத்தை மீறி எந்த செயலிலும் நான் ஈடுபடவில்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை நீதிபதி வீரராகவன் விசாரித்தார். பின்னர் வைகுண்டராஜனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, சென்னையில் தங்கியிருக்க வேண்டும், எழும்பூர் காவல் நிலையத்தில் தினசரி காலை, மதியம், மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications