அழகிரி கேள்வி: கொந்தளித்த கருணாநிதி
டெல்லிமதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பாக ஜெயா டிவி நிருபர் கேட்ட கேள்வியால் கோபம் அடைந்த முதல்வர் கருணாநிதி, அவரை ஒருமையில் விளித்து கடுமையாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் கருணாநிதி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் கருணாநிதியை செய்தியாளர்கள் சந்தித்தனர். காரில் இருந்தபடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் கருணாநிதி.
அப்போது ஜெயா டிவி நிருபர் மதுரையில் தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு மு.க.அழகிரிதான் காரணம் என்று கூறுப்படுகிறதே என்று கேட்டார்.
இதைக் கேட்டதும் கடும் கோபமடைந்தார் கருணாநிதி. மிகக் கடுமையாக அவரை நோக்கி, எதுடா தெரிந்த உண்மை. நீதாண்டா கொலை செய்தாய், போடா என்று கூறினார். இதையடுத்து முதல்வரின் கார் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.
ஜெயா டிவி நிருபரை நோக்கி முதல்வர் கருணாநிதி ஒருமையில் விளித்து கடுமையாக பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications