கொழும்பில் குண்டுவெடிப்பு - 7 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:கொழும்பின் புறநகர்ப் பகுதியில் ராணுவ டிரக்கை குறி வைத்து நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இதனால் கொழும்பில் பதட்டம் அதிகரித்துள்ளது.

கொழும்பின் புறநகர்ப் பகுதி ரத்னமாலா. நேற்று மாலை இப்பகுதியில் பெலிக்கடே சந்திப்பு பகுதியில், கொழும்பு-காலே நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஒரு டிரக் வந்து கொண்டிருந்தது.

அப்போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில், 7 பேர் உயிரிழந்தனர். 4 அதிரடிப்படை ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 14 பேர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில்தான் விமானப்படை விமான நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+