ஜூன் 1ம் தேதி முதல் ஹஜ் விண்ணப்பங்கள்
சென்னை:ஹஜ் செல்ல விரும்புகிறவர்கள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடமிருந்து ஜூன் 1ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
2007ம் ஆண்டிற்கான புனித ஹஜ் யாத்திரை செல்ல விரும்புவோருக்கு விண்ணப்பங்கள் மற்றும் நெறிமுறைகள் சென்னையில்,
ரோஸி டவர்,3வது தளம், 13(பழைய எண்7),மகாத்மா காந்தி சாலை, சென்னை-34 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
சென்னையில் மாற்றக்கூடிய ரூ.100க்கான டிடி, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு என்ற பெயரில் எடுத்து இந்த முகவரியில் நிர்வாக அலுவலரிடம் கொடுக்க வேண்டும்.
விண்ணப்பங்களை நாளை(ஜூன் 1ம் தேதி) முதல் பெறலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது செலுத்தப்படும் அன்னிய செலவாணித் தொகையில், ஏற்கனவே காசோலையாக கொடுத்த முன் பணம் ரூ.100யை கழித்துக் கொண்டு கொடுக்கலாம்.
ஒரு உறையில் 6 விண்ணப்பங்கள் மட்டுமே அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன், ஒரு நபருக்கு அந்நியச் செலவாணி முன்பணம் ரூ.10,600க்கு டிடி எடுத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம் சமர்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் மாதம் 30ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications