டி.ஆர்.பாலுவை ஓட விட்ட தொழிலாளர்கள்
விசாகப்பட்டனம்:மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை விசாகப்பட்டனம் இந்துஸ்தான் கப்பல் கட்டும் தொழிற்சாலை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்ததால் டி.ஆர்.பாலு அங்கிருந்து ஓட்டமும், நடையுமாக வெளியேற நேரிட்டது.
விசாகப்பட்டத்தில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான இந்துஸ்தான் கப்பல் கட்டும் தொழிற்சாலையை சீரமைத்து ஸ்திரப்படுத்த வேண்டும் என அத்தொழிற்சாலை ஊழியர்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர். ஆனால் மத்திய கப்பல் துறை இதைக் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.
இந் நிலையில் சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்குப் புதிய கப்பல் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக இந்துஸ்தான் கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு டி.ஆர்.பாலு வந்தார்.
அப்போது தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைககள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பாலுவை நோக்கி வந்து முற்றுகையிட்டனர். இதைப் பார்த்த பாலு அங்கு எதுவும் பேசாமல் கப்பலில் ஏறினார். கூடவே அதிகாரிகளும் கப்பலில் ஏறினர்.
ஆனால், தொடர்ந்து தொழிலாளர்கள் தீவிரப் போராட்டத்தில் குதித்ததால் தனது பேச்சை பாதியிலேயே ரத்து செய்து விட்டு அங்கிருந்து ஓட்டமும், நடையுமாக வெளியேறினார் பாலு.












Click it and Unblock the Notifications