எச்ஐவி பாதிப்பு-துபாயிலிருந்து நாடு திரும்பும் இந்தியர்
துபாய்:எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்ட இந்தியர் துபாயிலிருந்து நாடு திரும்புகிறார்.
இந்தியாவைச் சேர்ந்த கன்னியப்பன் மோகன்தாஸ் (37), கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி விசிட் விசா மூலம் துபாய் சென்றார்.
ஒரு வாரத்திற்கு பின் இந்தியா திரும்ப துபாய் விமான நிலையத்திற்கு வந்தபோது அவருடைய பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது.
இதுகுறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தார். அப்போது போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீஸாரை தாக்கியுள்ளார்.
இதையடுத்து இவர் கைது செய்து பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியே வந்த இவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். இதில் படுகாயமடைந்த இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரை மருத்துவர்கள் சோதித்தபோது இவர் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு இந்தியா திரும்ப விமான பயண சீட்டும், தகுதி சான்றிதழும் உடனடியாக பெற்று தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications