பிள்ளையன் கோஷ்டி தாக்கி கருணா கும்பலில் 6 பேர் பலி
கொழும்பு:இலங்கையில் கருணா கோஷ்டியினருகும் அவர்களிடமிருந்து பிரிந்து சென்ற பிள்ளையன் அணிக்கும் ஏற்பட்ட மோதலில் கருணா கோஷ்டியினர் 6 பலியாகியுள்ளனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளிடமிருந்து கருணா கோஷ்டியினர் பிரிந்து சென்று தனியாக செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு இலங்கை ராணுவம் உதவி வருகிறது.
இப்போது கருணா கோஷ்டிக்குள்ளேயே பிரிவு ஏற்பட்டுள்ளது. பிள்ளையன் தலைமையில் ஒரு குழு தனியாக பிரிந்து சென்றது.
இந் நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பிள்ளையன் அணியை சேர்ந்த 8 பேரை கருணா கோஷ்டியினர் கடத்தி சென்றதையடுத்து இந்த சண்டை மூண்டது. பொலனருவா பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் கருணா கோஷ்டியை சேர்ந்த 6 பேர் பலியாயின். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் இலங்கை ராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக சென்றபோது, குண்டுகள் தவறுதலாக வெடித்ததில் 3 அதிரடிப்படையினர் பலியாகியுள்ளனனர்.












Click it and Unblock the Notifications