சென்னையில் மணிப்பூர் அமைச்சர் மகள் மாயம்

Subscribe to Oneindia Tamil

அம்பத்தூர்:சென்னையில் படித்து வந்த மணிப்பூர் அமைச்சரன் மகள் காணாமல் போயுள்ளார்.

மணிப்பூர் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் முகமது அலாவுதீன்கான் மகள் சுல்தானா(19), சென்னை நுங்கம்பாக்கம் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

சுல்தானா மணிப்பூரில் பள்ளியில் படிக்கும்போது ஒருவரை காதலித்து வந்ததால், அவரை அமைச்சர் சென்னையிலுள்ள தன் மகன் அந்தாஸ் கான் வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்தார்.

நுங்கம்பாக்கத்தில் ஒரு பள்ளியின் சுல்தானா பிளஸ் 1 படித்து வந்தார்.

இந் நிலையில் இன்று காலை உடற்பயிற்சிக்கு செல்வதாக தன் அண்ணனிடம் கூறிவிட்டு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை.

அந்தாஸ் கான் தன் குடியிருப்பிலுள்ள காவலரிடம் சுல்தானா பற்றி விசாரித்தபோது, அவர் ஒரு காரில் ஏறி போனதாகக் கூறினார்.

இதையடுத்து தனது தங்கை கடத்தப்பட்ட திருமங்கலம் காவல் நிலையத்தில் அந்தாஸ் கான் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சுல்தானா தனது காதலருடன் சென்றாரா என்றும் விசாரணை நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+