கனிமொழிக்கு பதவி ஏன்? கருணாநிதி விளக்கம்
சென்னை: திமுக மேலிடம் எடுத்த முடிவின்படிதான் கனிமொழிக்கு எம்.பி. பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இது நானாக எடுத்த முடிவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கனிமொழிக்கு ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு முதல்வர் கருணாநிதி அளித்துள்ள பேட்டியில் விளக்கியுள்ளார்.
அதில், கனிமொழியின் அரசியில் பிரவேசம் நான் மட்டும் எடுத்த முடிவல்ல. பொதுச் செயலாளர், பொருளாளர், துணை பொதுச் செயலாளர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மற்ற நிர்வாகிகள் கனிமொழி மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ராஜ்யசபா எம்.பி பதவி கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி தான் அவருக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டது.
பொதுமக்களின் சிறந்த பாராட்டுக்களை பெரும் அளவிற்கு எங்களது மத்திய அமைச்சர்கள் அனைவரும் சிறப்பாக தங்களது கடமைகளை செய்து வருகிறார்கள்.
இடஒதுக்கீட்டை பலப்படுத்தும் வலிமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்காக ஒரு கமிட்டி நாடாளுமன்றத்தில் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications