அதிமுக அலுவலகத்தை இடிக்கதிமுக அரசு நோட்டீஸ்: ஜெ.
சென்னை: அதிமுக தலைமை கழகத்தை இடிக்க தமிழக அரசு நோட்டிஸ் அணுப்பியிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தென்காசி தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக அவைத் தலைவருமான கே.அண்ணாமலை மகள் திருமணம் சென்னையில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து ஜெயலலிதா பேசுகையில்,
திருமண விழாக்களில் நல்ல வார்த்தைகள் பேச வேண்டும். ஆனால் இன்று சூழ்நிலை வேறு மாதிரியாக உள்ளது. மகிழ்ச்சியான நேரத்தில் அது பற்றி அதிகம் பேச விரும்பவில்லை.
1972ம் ஆண்டு எம்ஜிஆர் நிறுவிய அதிமுக தலைமை கழக கட்டிடத்தை இடிக்க இன்று அரசு நேட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன் மூலம் இந்த அரசின் கதை முடியப் போகும் நேரம் வந்து விட்டது என்றார் ஜெயலலிதா.
எதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, என்ன காரணத்திற்காக இடிக்க அரசு முடிவு செய்துள்ளது என்பது குறித்து ஜெயலலிதா விரிவாக விளக்கவில்லை.












Click it and Unblock the Notifications