பங்களாவில் விபச்சாரம்-மும்பை பெண்கள் கைது
சென்னை: சென்னை அடையாறில் ஒரு ஆடம்பர பங்களாவில் விபசாரத்தில் ஈடுபட்ட 4 மும்பை பெண்கள் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அடையாறு காந்தி நகரில் ஆடம்பர பங்களா ஒன்றில் விபசாரம் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விபசார தடுப்பு பிரிவு போலீஸார் அந்த பங்களாவில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது மும்பை பெண்கள், ஆண்களுடன் உல்லசாமாக இருந்தனர். போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்ற அகிலா கான் (25), நேகாசிங் (25), முஷ்கான் கான், மேகா யாதவ் ஆகிய நான்கு மும்பை பெண்கள் மற்றும் சந்திரமோகன் ரெட்டி, வெங்கடேசன், குணால் மைதீ, ஜோலோ, ராகேஷ், மாலிக் ஆகியாரை போலீஸார் கைது செய்தனர்.
புரோக்கர் சோனாலட்சுமி, அஜய், வினோத்குமார் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். சோனாலட்சுமி பல காலமாக போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி வருபவர் ஆவார்.
இந்தக் கும்பலைப் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.