தண்ணீர் வாளிக்குள் விழுந்து சிறுவன் பரிதாப சாவு
சென்னை:சென்னையில், குளியலறையில் வைக்கப்பட்டிருந்த வாளியில் விழுந்த ஒன்றரை வயது சிறுவன், நீரில் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தான்.
சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் சையத் முகம்மது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கு ஜமீலா பானு என்கிற மனைவியும், சையது உமர் என்கிற ஒன்றரை வயது மகனும் உள்ளனர்.
நேற்று டெல்லி சென்றார் முகம்மது. அவரை அனுப்பி விட்டு, ஜமீலா வீட்டு வேலைகளில் மும்முரமானார். குழந்தை உமர் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது திறந்திருந்த குளியல் அறைக்குள் போன உமர், அங்கு தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளிக்குள் கையை விட்டு விளையாடியுள்ளான். பின்னர் எக்கி எட்டிப் பார்த்தபோது தவறுதலாக வாளிக்குள் விழுந்து விட்டான்.
இதனால் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தான். மகனுடைய சத்தம் கேட்காமல் தேடி வந்து பார்த்த ஜமீலா, குளியலறையில், உமர் பரிதாபமாக இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications