கூவத்தில் குளித்த 2 பேர் சேற்றில் சிக்கி பலி
சென்னை:சென்னை கூவம் ஆற்றில் குளிக்க சென்ற 2 சேற்றில் சிக்கி உயிரிழந்தனர்.
சென்னை ஆவடியை சேர்ந்த ரகு (34), வேலு(38) ஆகிய இருவரும் நண்பர்களுடன் நேற்று மாலை கூவம் ஆற்றில் குளிக்க சென்றனர்.
இவர்கள் ஆற்றின் மத்தியில் குளிக்க சென்ற போது சேற்றுக்குள் சிக்கிக் கொண்டனர். அதை பார்த்த உடனிருந்த நண்பர்கள் காப்பாற்ற சென்றனர். ஆனால் சேற்றிலிருந்து அவர்களை வெளியே இழுக்க முடியவில்லை.
உடனே ஆவடி தீயணைப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி அவர்களை இழுத்தனர். ஆனால், அதற்குள் இருவரும் சகதியில் மூழ்கி பலியாகிவிட்டனர்.
நீண்ட போராட்டத்திற்குப் பின் அவர்களது சடலங்கள் தான் மீட்கப்பட்டன.
இதே போல் கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரான்சிஸ் மகன் ஸ்டீபன்(14) நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு குளிக்க சென்றான். அப்போது ராட்சத அலை ஒன்று ஸ்டீபனை இழுத்து சென்றது.
அப்போது அருகிலிருந்து பொது மக்கள் அவனை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால், அதற்குள் ஸ்டீபன் பலியாகிவிட்டான்.