அதிமுகவினரை விடுவிக்க வேண்டும்: ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள அதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவினர் அனைத்து இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்த அதிமுகவினர் அனைவரையும் கைது செய்து ரிமாண்ட் செய்வது ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஒவ்வாத விஷயமாகும்.
ஆகவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான அதிமுகவினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications