மதுரை மேற்கு 39 பேர் மனு தாக்கல்
மதுரை:மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் மொத்தம் 39 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.
மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 1ம் தேதி தொடங்கியது. நேற்று மாலையுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது.
அதிமுக சார்பில் செல்லூர் ராஜு, காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.கே.ராஜேந்திரன், தேமுதிக சார்பில் சிவமுத்துக்குமாரன், பாஜக சார்பில் சீத்தாராமன் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். மேற்று மாலை முடிவடைந்த கால அவகாசத்திற்குப் பின்னர் மொத்தம் 39 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களில் 10 பேர் அரசியல் கட்சிகள் சார்பில் மனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் மற்றும் மாற்று வேட்பாளர்கள் ஆவர். 29 பேர் சுயேச்சைகள்.
இன்று மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. அதன் பின்னர் நாளையும், நாளை மறுநாளும் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ள அவகாசம் அளிக்கப்படும். 11ம் தேதி மாலை 3 மணி வரை மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அதன் பின்னர் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தெரிய வரும்.
மனுத் தாக்கல் செய்துள்ள 39 வேட்பாளர்கள் விவரம்
செல்லூர் ராஜு (அதிமுக), எம்.எஸ்.பாண்டியன் (அதிமுக மாற்று), கே.எஸ்.கே.ராஜேந்திரன் (காங்கிரஸ்), ராமன் (காங்கிரஸ் மாற்று), சிவமுத்துக்குமரன் (தேமுதிக), ராமர் (தேமுதிக மாற்று), சசிராமன் என்கிற சீத்தாராமன் (பாஜக), சுரேந்திரன் (பாஜக மாற்று), மகாலிங்கம் என்கிற சிற்றறசு (புதிய தமிழகம்), சுவி செல்வன் (மக்கள் மாநாட்டுக் கட்சி).
சுயேச்சை வேட்பாளர்கள் - தினகரன் (பார்வர்ட் பிளாக்-தினகரன்), பத்மராஜன், தூதை செல்வம், செந்தில்குமார், கிறிஸ்துதாஸ், கே.பி.ராஜா, சையத் ஆலித் ஆயிஷா, வைரம், முத்துச்சாமி, நூர்முகம்மது, சந்திரசேகரன், மகுடபதி, துர்கா ராணி, புயல் பொன்னையா, ராஜு, ஜான் பிரிட்டோ செல்வராஜ், போஸ், பால் பாண்டியன், பழனிகணேஷ், ஒய்யனனன், பூமிநாதன், மூவேந்தன், சந்திரசேகரன், ஆரோக்கியம், மன்மதன், பாண்டியன், ரவிச்சந்திரன், வடிவேல், விமல்ராஜ்.












Click it and Unblock the Notifications