சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர விபத்து-2 பெண்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் 2 பெண்கள் பலியானார்கள். 4 பெண்கள் படுகாயமடைந்தனர்.
சிவகாசி அருகே நாராயணபுரம என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்று வழக்கம் போல 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.
இன்று காலை ராக்கெட்டுகள் வைக்கப்பட்டிருந்த நான்கு அறைகளில் பயங்கர சப்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் அந்த அறைகளில் இருந்த அனைத்து வெடிகளும் பலத்த சப்தத்துடன் வெடித்தன. நான்கு அறைகளும் இதில் நாசமடைந்தது.
இந்த அறைகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 2 பெண்கள் உடல் கருகி அங்கேயே இறந்தனர். 4 பெண்கள் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications