மேட்டூர் அணை திறக்கப்படவில்லைவிவசாயிகள் கடும் ஏமாற்றம்

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த நிலையில், போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் மேட்டூர் அணை இன்று திறக்கப்படவில்லை.

ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதியன்று மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்படும். ஆனால் இது ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடப்பதில்லை. காரணம், அணையில் போதிய நீர் இல்லாமல்இருப்பதும், கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பதும் என பல காரணங்களால் அணை திறப்பு சரிவர நடப்பதில்லை.

இந்த நிலையில் இந்த ஆண்டாவது குறித்த காலத்தில் (இன்றைக்கு) அணை திறக்கப்படுமா என்று காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், இன்று எதிர்பார்த்தபடி அணை திறக்கப்படவில்லை.

பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் நல்லுச்சாமி இன்று மேட்டூர் அணையை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அணையில் 36 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. எனவே பருவ மழை பெய்து அல்லது கர்நாடகத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் வந்தால் மட்டுமே அணையைத் திறக்க முடியும் என்றார்.

எனவே இநத ஆண்டும் குறித்த காலததில் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.இதனால் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+