கணவனை உதறி, கள்ளக் காதலனைநம்பி நட்டாற்றில் விடப்பட்ட பெண்
கரூர்:கள்ளக் காதலனை நம்பி, கட்டிய கணவன், குழந்தைகளை உதறி விட்டு வீட்டை விட்டு வெளியேறிய பெண், இப்போது இருவராலும் புறக்கணிக்கப்பட்டு நட்டாற்றில் விடப்பட்டார்.
கரூர் அருகே உள்ள வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக இருக்கிறார். இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த மீனாட்சி என்கிற ஹேமமலானி என்பவருடன் கல்யாணம் நடந்தது.இவர்களுக்கு சக்திபாலாஜி, ராகுல் என்ற மகன்கள் உள்ளனர்.
பாஸ்கர் அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்வார். இந்நிலையில் மீனாட்சிக்கும் நகை செய்யும் தொழிலாளியான செந்தில்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பாஸ்கர் அடிக்கடி வெளியூர் போய் விடுவது அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்டு மீனாட்சியும், செந்தில்குமாரும் அடிக்கடி வெளியூர்களுக்குப் போவது, சினிமாவுக்குப் போவது, தனிமையில் சந்திப்பது என இருந்துள்ளனர்.
இந்த நிலையில், மீனாட்சி ஒரு நாள் செந்தில்குமாருடன் ஓடிப் போனார். இது தெரியாமல் அவர் காணாமல் போய் விட்டதாக கருதி பல இடங்களிலும் தேடியுள்ளார் பாஸ்கர். கிடைக்காத காரணத்தால், கரூர் எஸ்பி சுகுமாரை சந்தித்துப் புகார் கொடுத்தார்.
போலீஸார் மீனாட்சியைத் தேடினர். அப்போதுதான், செந்தில்குமாரும், மீனாட்சியும் திருப்பூரில் வசித்து வருவது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் கரூருக்கு அழைத்து வந்தனர் போலீஸார். பாஸ்கரையும் அழைத்தனர். தனது மனைவி வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்ததை அறிந்த பாஸ்கர், இவரை எனது மனைவியாக ஏற்க முடியாது என்று கூறி விட்டுச் சென்ற விட்டார்.
இந்த நிலையில் திடீரென செந்தில்குமாரும், மீனாட்சியை ஏற்க முடியாது என்று கூறி விட்டார். இதனால் மீனாட்சியின் நிலை கேள்விக்குறியானது.
குழம்பிப் போன போலீஸார், மீனாட்சியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications