காந்தி பிறந்த நாள்-உலக அகிம்சை தினம்: ஐ.நா.
டெல்லி:மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி, உலக அகிம்சை தினமாக அனுசரிக்கப்படும் என ஐக்கிய நாடுள் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
காந்தியடிகளுக்கும், இந்தியாவுக்கும் உலக அளவில் கிடைத்துள்ள கெளரவமாக இது கருதப்படுகிறது.
மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரி இந்தியாவின் சார்பில் ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 142 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
இந்த தீர்மானம் தற்போது பொதுச் சபையில் நிறைவேறியுள்ளது. இதைத் தொடர்ந்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 2ம் தேதியை ஐ.நா. உறுப்பு நாடுகள் உலக அகிம்சை தினமாக கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த நாளில் அமைதி, அகிம்சை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அமைதி, அகிம்சை குறித்த பாடங்கள் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஐ.நா. பொதுச் சபையில் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் அனந்த் சர்மா பேசுகையில்,
தீர்மானம் நிறைவேற ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications