ஜனாதிபதி தேர்தல்-வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று முறைப்படி வெளியிட்டது. இதையடுத்து வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று முறைப்படி வெளியிட்டது. இதையடுத்து இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
ஜூன் 30ம் தேதி வரை மனுக்களைத் தாக்கல் செய்யலாம். ஜூலை 2ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஜூலை 4ம் தேதிக்குள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஜூலை 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ம் தேதி நடைபெறும்.
ஜூலை 25ம் தேதி குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து அப்துல் கலாம் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜஸ்தான் ஆளுநர் பிரதீபா பாட்டீல், இன்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
பிரதமர் இல்லத்தில் அவரைச் சந்தித்த பிரதீபா பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
அப்போது தன்னை வேட்பாளராக்கியதற்காக சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் பிரதீபா பாட்டீல்.












Click it and Unblock the Notifications