திருச்செந்தூரில் திடீரென உள் வாங்கிய கடல்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்:திருச்செந்தூரில் இன்று காலை திடீரென கடல் உள் வாங்கியது. கடலுக்கடியில் இருக்கும் பாறைத் திட்டுக்களும் மணல் பரப்பும் வெளியில் தெரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கமாக பெளர்ணமி, அமாவாசை காலங்களில் கடல் லேசாக உள்வாங்கும். ஆனால், சுனாமிக்குப் பின் கடல் பகுதியில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
அடிக்கடி கடல் உள் வாங்குவது வழக்கமாகிவிட்டது. இந் நிலையில் இன்று காலை 7.20 மணியளவில் மீண்டும் கடல் உள்வாங்கியது.
நாழிக்கிணறு பகுதியில் ஆரம்பித்து நாராயண சுவாமி கோவில் வரையிலான சுமார் 50 அடி நீளத்துக்கு கடல் உள்வாங்கி பாசி படிந்த பாறைகள் வெளியில் தெரிந்தன.
சுமார் 2 மணி நேரத்துக்குப் பின் கடலில் இயல்பான நிலை திரும்பியது.












Click it and Unblock the Notifications