குற்றாலத்தில் சீசன் டல்-மக்கள் ஏமாற்றம்
தென்காசி:குளு குளு குற்றாலத்தில் சீசன் இன்னும் களை கட்டாததால், சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
![]() |
குளு குளு குற்றாலத்தில் ஜூன் முதல் வாரத்தில் சீசன் தொடங்கும். கேரளாவில் அந்தக் கால கட்டத்தில் பருவ மழை வெளுத்து வாங்கும் என்பதாலும், குற்றால மலையிலும் மழை பெய்யும்.
இதனால் ஜூன் முதல் வாரத்திலிருந்தே குற்றாலம் களை கட்டத் தொடங்கும். ஆனால் இந்த முறை இன்னும் சீசன் தொடங்கவில்லை. அருவிகளில் சிறிதளவே தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இருப்பினும் கடந்த ஓரிரு நாட்களாக கேரளாவில் நல்ல மழை பெய்து வருவதால் அருவிகளில் ஓரளவு தண்ணீர் வர ஆரம்பித்துள்ளது. ஐந்தருவியில், நான்கு அருவிகளில் மட்டுமே தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது.
ஓரளவுக்கு குளிர்ந்த காற்றும் வீசுகிறது. இருப்பினும் இன்னும் சாரல் மழை தொடங்கவில்லை.
சீசன் மந்தமாக இருப்பதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஓரளவுக்கு கொட்டும் தண்ணீரில் உடலை நனைத்துக் கொண்டு செல்கின்றனர். இன்னும் சில நாட்களில் சீசன் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













Click it and Unblock the Notifications