கோடநாடு மாளிகை: கருணாநிதிக்கு ஜெ. சவால்
சென்னை:கோடநாடு எஸ்டேட்டில் 90 அறைகளும், குளியல் அறையும் இருப்பதாக நிரூபிக்கப்படாவிட்டால், முதல்வர் கருணாநிதி அரசியலை விட்டு விலகத் தயாரா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த பொதுக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில், கோடநாடு எஸ்டேட்டில் 2000 மரங்கள் வெட்டப்பட்டு அங்கு பிரமாண்ட மாளிகை கட்டப்பட்டுள்ளதாக சிலர் கூறுகிறார்கள்.
மேலும் அந்த எஸ்டேட் வளாகத்தில் பெரிய நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளதாகவும், அந்த மாளிகையில் 90 அறைகள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
நான் அந்த எஸ்டேட்டுக்கு பத்திரிக்கையாளர்களை அழைத்துச் சென்று காட்டுகிறேன். 90 அறைகளும், நீச்சல் குளமும் இங்கு இல்லாவிட்டால், அப்படிக் கூறியவர்கள் அரசியலை விட்டு விலகத் தயாரா என்று நான் சவால் விடுகிறேன்.
மதுரை மேற்குத் தொகுதியில் நான் வருகிற 21ம் தேதி பிரசாரம் செய்கிறேன். அந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்தால் நிச்சயம் மதுரை மேற்கில் அதிமுகவே வெற்றி பெறும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications