கருணாநிதிக்கு பிரதீபா பாட்டீல் நன்றி

Subscribe to Oneindia Tamil

சென்னை:குடியரசுத் தலைவர் வேட்பாளராக தன்னைத் தேர்ந்தெடுக்க முயற்சி மேற்கொண்டதற்காக முதல்வர் கருணாநிதிக்கு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல் தொலைபேசி மூலம் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல், முதல்வர் கருணாநிதியை சனிக்கிழமை பிற்பகல் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

டெல்லியில் தங்கியிருந்து முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட முயற்சிகளுக்காக உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அப்போது அவர் குறிப்பிட்டார்.

அப்போது முதல்வர் கருணாநிதி பிரதீபா பாட்டீலிடம், ஜூலை 1ம் தேதியன்று சென்னையில் மாபெரும் மகளிர் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், அந்த நிகழ்ச்சியின்போது தமிழக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களிடம் வாக்கு கேட்கும் நிகழ்ச்சியை வைத்துக் கொள்ளலாம் என்றும் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

இதை ஏற்ற பிரதீபா பாட்டீல், அவசியம் கலந்து கொள்வதாக முதல்வரிடம் மகிழ்ச்சியோடு தெரிவித்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+