பிரதீபாவை சந்தித்த பைரான் சிங் ஷெகாவத்
டெல்லி:ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும், ராஜஸ்தான் ஆளுநர் பிரதீபா பாட்டீலை, துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் சந்தித்துப் பேசினார்.
![]() |
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ராஜஸ்தான் ஆளுநரான பிரதீபா பாட்டீல் போட்டியடுகிறார்.
எதிர் முனையில் பைரான் சிங் ஷெகாவத் களம் காணுவார் எனக் கூறப்படுகிறது. அவரை 3வது அணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஆதரிக்கும் எனத் தெரிகிறது.
![]() |
இந்த நிலையில் நேற்று டெல்லி வந்திருந்தார் பிரதீபா பாட்டீல். பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரை பிரதிபீ பாட்டீல் சந்தித்துப் பேசினார்.
மேலும் ஷெகாவத்தையும் சந்தித்துப் பேச நேரம் கேட்டிருந்தார். இந்த நிலையில் பிரதீபா பாட்டீல் தங்கியிருந்த ஜோத்பூர் மாளிகைக்கு ஷெகாவத் திடீரென சென்றார். துணை குடியரசுத் தலைவர் பதவியில் இருக்கும் ஷெகாவத், மாநில ஆளுநரைத் தேடிச் சென்று பார்ப்பது புரோட்டாகாலுக்கு முரணானது.
இருப்பினும் அந்த மரபைப் பொருட்படுத்தாமல் பிரதீபா பாட்டீலை, ஷெகாவத் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவும் உடன் இருந்தார்.
பிரதீபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ஷெகாவத்தும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்தான். அவரும், பைரான் சிங் ஷெகாவத்தும் அருகருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications