For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹோமோவுக்கு உட்படாத மாணவனைக் கொன்ற ஆசிரியர்

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:ஓரினச் சேர்க்கை உறவுக்கு உடன் பட மறுத்த தனது மாணவனைக் கொலை செய்தார் ஆசிரியர்.

நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பாம்புக்கோவில் சந்தை என்ற பகுதியைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி. இவர் ஒரு வழக்கறிஞர். இவரது மகன் விக்னேஷ்வரன். கடந்த 5ம் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் பிணமாகக் கிடந்தான் விக்னேஷ்வரன்.

சத்யராஜ் பூபதி என்பவர்தான் விக்னேஷ்வரனைக் கொலை செய்தது தெரிய வந்தது. சத்யராஜ் பூபதி, ஆசிரியர் பயிற்சி வகுப்பை முடித்துள்ளார். அப்பகுதியில் ட்யூஷன் எடுத்து வருகிறார். விக்னேஷ்வரன் மற்றும் அவனது தம்பி இந்திரஜித்திற்கும் டியூஷன் எடுத்து வந்தார்.

ஓரினச்சேர்க்கைப் பிரியரான சத்யராஜ் பூபதி, விக்னேஷ்வரனை மயக்கி தனது இச்சைகளைத் தீர்த்துக் கொண்டார். இந்த நிலையில்தான் பிணமாகக் கிடந்தான் விக்னேஷ்வரன். இதையடுத்து சத்யராஜ் பூபதியை போலீஸார் தேடி வந்தனர்.

இச்சூழ்நிலையில், மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் சத்யராஜ் பூபதி சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து நெல்லை போலீஸார் விசாரித்தனர்.

அப்போது சத்யராஜ் பூபதி கொடுத்த வாக்குமூலத்தில், விக்னேஷ்வரனை பலமுறை வெளியே கூட்டிச் சென்று ஓரினச் சேர்க்கை வைத்துக் கொண்டேன். சம்பவத்தன்றும் பாறைக்குளத்திற்கு அழைத்துச் சென்று ஓரினச் சேர்க்கைக்கு முயன்றேன். ஆனால் விக்னேஷ்வரன் ஒத்துழைக்கவில்லை.

இதனால் நான் கோபம் அடைந்து அவனைத் தாக்கினேன். பதிலுக்கு அவனும் என்னை அடித்தான். மேலும் வெளியே போய் சொல்லப் போவதாகவும் எச்சரித்தான்.

இதனால் பயந்து போன நான், விக்னேஷ்வரனைக் கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றேன் என்று கூறியுள்ளார் சத்யராஜ் பூபதி.

ஆசிரியர் பணிக்கான பயிற்சியை முடித்த ஒருவர், மாணவனிடம் ஓரினச் சேர்க்கை உறவை வைத்துக் கொண்டு, அவன் மறுத்ததால் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X