அஸ்ஸாம் குண்டுவெடிப்பில் 7 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

குவஹாத்தி:அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 7 பேர் பலியானார்கள். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

குவஹாத்தியில், மச்சோவா மார்க்கெட் பகுதியில் உள்ள பிரபல மசூதி ஒன்றின் அருகே இந்த பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் கொல்லப்பட்டவர்களும், காயமடைந்தவர்களும் மார்க்கெட்டுக்குக் காய்கறி வாங்க வந்தவர்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள்.

குண்டுவெடிப்பால் அந்தப் பகுதியே ரத்தக்களறியாக காணப்பட்டது. உல்பா தீவிரவாதிகள்தான் இதற்குக் காரணம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

குவஹாத்தி நகரில், 2வது ஆசிய கிராண்ட்ப்ரீ போட்டி நேற்று தொடங்கியது. அதேபோல, அபுபாச்சி மேளா என்கிற அஸ்ஸாம் மாநில திருவிழாவும் நேற்றுதான் தொடங்கியது. தாய்லாந்து நாட்டிலிருந்து வந்துள்ள தூதுக் குழுவும் குவஹாத்தியில் நேற்று மத்திய அமைச்சர்களுடன் முக்கிய சந்திப்பில் நேற்று ஈடுபட்டது.

இந்த மூன்று முக்கிய நிகழ்ச்சிகளையும் சீர்குலைக்கும் நோக்கில்தான் நேற்றைய குண்டுவெடிப்பு நடந்ததாக கருதப்படுகிறது.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து குவஹாத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+