சூறாவளியில் சிக்கி 3 மீனவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:நாகை மாவட்டத்தில் கடல் சூறாவளியில் சிக்கிக் காணாமல் போன 7 மீனவர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நாகை மாவட்டம் அதிராம்பட்டனம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 40க்கும் மேற்பட்ட படகுகளில் கடந்த 21ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது கடலில் ஏற்பட்ட சூறாவளிக் காற்றில் சிக்கி 9 பேர் காணாமல் போனார்கள். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
இந்த நிலையில் முத்துப்பேட்டை அருகே நைனார் என்பவரின் உடலும், அந்த இடத்திற்கு சற்று தொலைவில் கருப்பையா, பெரியசாமி ஆகியோரின் உடல்களும் கரை ஒதுங்கின. காணாமல் போன மற்ற நான்கு பேரும் கூட இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications