இனி பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டுகள்
டெல்லி:
காகிதத்திற்கு பதிலாக இனி பிளாஸ்டிக்கில் ரூபாய்களை வெளியிட ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் திட்டமிட்டுள்ளன.
காகிதத்திலான ரூபாய் நோட்டுகள் குறுகிய காலத்தில் சிதைந்து விடுகிறது. அதுமட்டுமல்லாமல் கள்ள நோட்டுகள் புழக்கமும் அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க பாலிமர் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது குறித்து மத்திய அரசும், ரிசர்வ வங்கியும் ஆலோசித்து வருகின்றன.
இவை எளிதில் கிழியாது, தண்ணீரினாலும் பாதிக்கப்படாது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ருமேனியா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் உபயோகத்தில் உள்ளன.
இந்தியாவில் சோதனை முயற்சியாக முதலில் 10 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடப்படும். இந்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் சிறப்பு தொழில்நுட்பத்தில் தயாராவதால் கள்ள நோட்டுகள் எளிதில் தயாரிக்க முடியாது.
மெக்சிகோ போன்ற நாடுகளில் புழக்கத்திலுள்ள பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளில் ஜன்னல் போன்ற டிசைன் இருக்கும். இதை போன்று போலியாக உருவாக்குவது மிகுந்த சிரமம்.












Click it and Unblock the Notifications