ஜெ.வுடன் அமர்சிங் சந்திப்பு
சென்னை:சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அமர்சிங் சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை மீண்டும் நிறுத்த 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி கடுமையாக முயன்றது. ஆனால் கலாம் திட்டவட்டமாக மறுத்து விட்டதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து பிரதீபா பாட்டீலுக்கும் ஆதரவு இல்லை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன் சுயேச்சையாக களம் இறங்கியுள்ள ஷெகாவத்துக்கும் ஆதரவு இல்லை என்ற நிலையை 3வது அணி எடுத்துள்ளது.
ஆனால் 3வது அணியின் ஆதரவைப் பெற தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரமாக முயன்று வருகிறது. இந்தப் பின்னணியில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நேற்று அமர்சிங் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் 3வது அணியின் நிலை குறித்து இருவரும் பேசியதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications