20-க்கு 20 உலக கோப்பை சச்சின் நோ

Subscribe to Oneindia Tamil

மும்பை:செப்டம்பரில் நடக்க இருக்கும் 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சச்சின் சேர்க்கப்படவில்லை.

வரும் செப்டம்பர் 11-ம் தேதி முதல் 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் நடக்க இருக்கின்றது. இதற்கான 30 வீரர்கள் கொண்ட உத்தேச அணி திலீப் வெங்சர்க்கார் தலைமையில் இன்று மும்பையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் சச்சின், டிராவிட், கங்குலி போன்ற முன்னணி வீரர்கள் சேர்க்கப்படவில்லை.

உலக கோப்பை தோல்விக்கு பின்பு இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றது. அதிலும் குறிப்பாக வங்கதேச தொடர், தென்னாப்ரிக்காவுடன் ஒரு நாள் தொடர் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி கம்பீரமாக நிற்கிறது. இதில் குறிப்பாக கங்குலி, சச்சின் போன்ற முன்னணி வீரர்கள் அணி வெற்றிக்கு முக்கிய காரணமானவர்கள்.

இவ்வளவு நன்றாக விளையாடியும் உத்தேச அணியில் திராவிட், டெண்டுல்கர் மற்றும் கங்குலி சேர்க்கப்படவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை. தற்போது நடந்து கொண்டிருக்கும் அயர்லாந்து தொடரில் பங்கேற்காத சேவாக், பதான், ஹர்பஜன் ஆகியோருக்கு இதில் வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது.

ஓய்வில் உள்ள சுரேஷ் ரெய்னா உடல் தகுதியை நிரூபித்தால் அவர் தேர்வு செய்யப் படுவார் என தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+