பிளஸ் ஒன் டாக்டர் சிசேரியன் செய்ததுஉண்மை: டாக்டர்கள் சாட்சியம்
திருச்சி:டாக்டர்கள் முருகேசன்-காந்திமதி தம்பதியின் மகன் திலீபன் ராஜ் பெண்ணுக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்து பிரசவம் பார்த்தது உண்மைதான் என்று அதுதொடர்பாக டாக்டர் முருகேசன் காட்டிய சிடியைப் பார்த்த ஆறு டாக்டர்களும் சாட்சியம் அளித்துள்ளனர்.
மணப்பாறையில் கிளினிக் வைத்து நடத்தி வந்த டாக்டர் தம்பதிகள் முருகேசன்-காந்திமதி. இவர்கள், கின்னஸ் சாதனையில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தங்கள் மகன் திலீபன் மூலம், சிகிச்சை பெற வந்த உறவுக்கார பெண்ணுக்கு சிசேரியன் செய்ய வைத்தனர்.
![]() |
இதை முருகேசன் சி.டி.யாக பதிவு செய்து, மணப்பாறையில் நடந்த இந்திய மருத்துவ கழக கூட்டத்தில் போட்டுக் காண்பித்தார். இந்த பிரச்சனை பெரியளவில் வெடித்ததால், மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் டாக்டர் தம்பதியை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான மகன் திலீபனும் சிறுவர் சீர்திருத்த நீதிமன்றத்தில் சரணடைந்தான்.
போலீஸார் டாக்டர் தம்பதியை காவலில் எடுத்து விசாரித்ததில், டாக்டர் முருகேசன், நான் சி.டி.யை உடைத்து விட்டேன் எனக் கூறினார்.
இந்த நிலையில், மணப்பாறையில் நடந்த இந்திய மருத்துவக் கழக கூட்டத்தில் முருகேசன் போட்டுக் காட்டிய சிடியைப் பார்த்த 6 டாக்டர்களை அழைத்து போலீஸார் விசாரித்தனர். மேலும் இவர்களை நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு மணப்பாறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
![]() |
இதையடுத்து ஆறு பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி தனித் தனியாக வாக்குமூலம் அளித்தனர். அப்போது தாங்கள் பார்த்த காட்சிகளை இவர்கள் நீதிபதியிடம் விவரித்தனர்.
சி.டியை உடைத்து விட்டதாக டாக்டர் முருகேசன் கூறியுள்ளதால், அதை பார்த்தவர்கள் தரும் வாக்குமூலம் வழக்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
![]() |
விசாரணைக்கு தடை கோரும் டாக்டர் தம்பதி:
இதற்கிடையே, தங்கள் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று டாக்டர் தம்பதியினர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், எங்கள் மீதும் எந்த புகாரும் இல்லை, எனவே எங்களை உதவி கலெக்டர் விசாரணை செய்தது தவறு. மேலும் நாங்கள் அளித்த சிகிச்சையில் யாரும் பாதித்திருந்தால் நுகர்வோர் நீதிமன்றம் சென்று நிவாரணம் கேட்டுக் கொள்ள வேண்டும், மேலும் தொடர்ந்து இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.















Click it and Unblock the Notifications