For Daily Alerts
Just In
தொடர்ந்து அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்
மேட்டூர்:
கர்நாடகத்திலும் தமிழகத்தின் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மேட்டூருக்கு நீர் வரத்து மேலும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கர்நாடகத்தில் ல இடங்களில் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு வரும் காவிரியின் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 32,825 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இப்போது அணையின் நீர் மட்டம் 82.12 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளவு 120 அடியாகும்.
அணையிலிருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
Comments
Story first published: Monday, May 7, 2007, 5:30 [IST]