நக்ஸல்கள்: விஜய்குமார் தலைமையில்அதிரடிப்படையினர் தொடர்ந்து வேட்டை
பெரியகுளம்:ஐ.ஜி. விஜய்குமார் தலைமையிலான அதிரடிப்படையினர் தேனி மாவட்டம் பெரியகுளம் மலைப் பகுதிகளில் தொடர்ந்து நக்சல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அதே போல வீரப்பன் நடமாடிய ஒகேனக்கல் காட்டு பகுதியிலும் நக்ஸல்கள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பெரியகுளம் முருகமலைப் பகுதியில் போலீஸாரின் தீவிர வேட்டையில் ஆயுதங்கள் மற்றும் தாக்குதலுக்குரிய வரை படங்கள் கிடைத்தன.
பிடிபட்ட இவர்கள் மாவோயிஸ்ட் மற்றும் ஆந்திர நக்சல்களுடன் சேர்ந்து பயங்கர தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.
காட்டுப் பகுதிகளில் பதுங்கியுள்ள நக்சலலைட்டுகளைப் பிடிக்கும் பொறுப்பு வீரப்பனை வேட்டையாடிய விஜயகுமாரிடம் வழங்கப்பட்டுள்ளது.
அவர் தனது தலைமையில் சிறப்பு அதிரடிப் படையை அமைத்துள்ளார். இந்தப் படையினர் மூன்று பிரிவாக காட்டுப் பகுதிகளில் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிரடிப் படைக்கு பெரியகுளம் காட்டுப்பகுதி புதியது என்பதால், மலைப்பாதை தெரிந்த உள்ளூர் போலீஸார் மற்றும் அப்பகுதி மலைவாழ் மக்கள், பொது மக்களும் உடன் செல்கின்றனர்.
இவர்கள் 3 நாட்களுக்குத் தேவையான உணவை எடுத்து சென்றுள்ளனர்.
இந் நிலையில் சந்தன கட்டை வீரப்பன் நடமாடிய ஒகேனக்கல் காட்டுப் பகுதியிலும் நக்ஸல்கள் பதுங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதனால் அங்கும் 25 அதிரடிப் படையினர் மற்றும் வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் இரண்டாவது நாளாக பேவனூர்பட், வேம்பரத்துக் கோம்பு, குடிப்பட்டி போன்ற இடங்களிலும் குகைகளிலும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே நக்ஸல்கள் பயம் மற்றும் போலீஸாரின் வேட்டையால், சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பெரியகுளத்தையடுத்த த்துப்பாறை, கும்பக்கரை போன்ற அருவிப் பகுதிகள் வெறிச்சோடிப் போய்விட்டன. அங்கு மயான அமைதி நிலவுகிறது.
இந் நிலையில் பிடிபட்ட 3 நக்சலைட்டுகளிடம் தேனி கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களிடமிருந்து இதுவரை உருப்படியாக ஒரு தகவலும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
பல வகையிலும் விசாரித்தும் அவர்கள் தங்கள் இயக்கம், செயல்பாடுகள் குறித்து பேச மறுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications