சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
சிவகாசி:சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். இன்னொரு ஊழியர் படுகாயமடைந்தார்.
சிவகாசி அருகே வடமல்லாபுரம் என்ற இடத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று காலை வெடிமருந்துக் கலவையை தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுவதும் சேதமடைந்தது.
விபத்தில் அமல்ராஜ் என்ற ஊழியர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார். பைரவன் என்பவர் படுகாயமடைந்தார். கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications