விழுப்புரத்தில் விபத்து-பிராந்தி லாரி தீப்பிடித்துஒருவர் பலி: சாலையில் சரக்கு வெள்ளம்
விழுப்புரம்:டாஸ்மாக் மகுடோனுக்கு பிராந்தி பாட்டில்களை ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் பலியானார். பாட்டில்கள் வெடித்து சிதறி பீதியைப் பரப்பின.
பண்ருட்டியில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு பிராந்தி பாட்டிலைகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரியும் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு இரும்பு ராடுகளை ஏற்றி வந்த லாரியும் இன்று காலை விழுப்புரம் அருகே வன்னியம்பாளையத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் பிராந்தி லாரியின் டீசல் டேங்க் வெடித்துச் சிதறியதில் இரு லாரிகளும் தீப்பிடித்துக் கொண்டன.
இதில் பிராந்தி பாட்டில்களை ஏற்றி வந்த லாரி டிரைவர்வர் அருள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
இரும்பு ராடு ஏற்றி வந்த லாரியின் டிரைவர் ரவிசந்திரன் (29), கிளீனர் ரமேஷ்(32) ஆகியோர் தப்பி விட்டனர்.
இச் சம்பவத்தால் லாரியிலிருந்த பிராந்தி பாட்டில்கள் வெடித்து சிதறி சாலையில் பிராந்தி வெள்ளம் போல் ஓடியது.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பிராந்தி சேதத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications