தமிழில் அரசாணை வெளியிட கோரி போராட்டம்- 45 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:அரசாணைகளை (கெஸட் அறிப்புகள்) தமிழில் வெளியிடக் கோரி சென்னையில் தலைநகர் தமிழ் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
கடற்கரை சாலையில் பாரதிதாசன் சிலை முன் தலைநகர் தமிழ் சங்கத்தினை சேர்ந்த 45க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து ஆங்கிலத்திலுள்ள அரசாணைகளின் பிரதிகளை எரிக்க முயன்றனர்.
அரசு அரசாணைகளை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து போலீஸாரால் அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். இவர்கள் மாலையில் விடுவிக்கப்படுவார்கள் என காவல் துறையினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications