காவிரி: கருணாநிதி கோரிக்கை-குமாரசாமி அதிருப்தி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கை, பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு மாநில விவசாயிகளிடையே பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
முதல்வர் கருணாநிதியை நான் மிகச் சிறந்த அரசியல்வாதியாக பார்க்கிறேன், மதிக்கிறேன், எனது அரசியல் வாழ்க்கையில் எனது தந்தை ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கிறேன்.
இப்படிப்பட்ட நிலையில் முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பது சரியல்ல. இரு மாநிலங்களும் தாய்மை உணர்வுடன் பழக வேண்டும் என்றார் குமாரசாமி.












Click it and Unblock the Notifications