வாக்கு சீட்டு கிழிப்பு: 25 கூட்டுறவு சங்கங்களுக்கு மறு தேர்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:பல்வேறு முறைகேடுகள் நடந்த 25 கூட்டுறவுச் சங்கங்களுக்கு மறு தேர்தல் நடத்தப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி.மணி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கான முதல் கட்டத்தில், மொத்தம் 22 ஆயிரத்து 934 சங்கத்தில் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டது.

இதன்படி ஜூலை 2ம் தேதி முதல் நிலைத் தேர்தலில் 1945 தொடக்கக் கூட்டுறவு சங்கங்களுக்கும், இதர 3,994 சங்கங்களுக்கும் வேட்பு மனு தாக்கல் நடந்தது. வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட 1,921 தொடக்க கூட்டுறவு சங்கங்களில், 1,338 தொடக்க கூட்டுறவு சங்கங்களில், 10,047 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தேர்தலில் ஓட்டுப் பெட்டியைத் தூக்கிச் சென்றது, வாக்குச் சீட்டுக்களை கிழித்தது, வாக்காளர்களிடையே தகராறு செய்தது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்த 25 சங்கங்களுக்கு மறு தேர்தல் நடத்தப்படும்.

கூட்டுறவுத் தேர்தல் முடிந்த பிறகு இந்த மறு தேர்தல் நடத்தப்படும். முதல் கட்டத் தேர்தல் சுமூகமாக நடந்தது. தோழமைக் கட்சியினர் ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் அங்கு மறுதேர்தல் நடத்துவோம்.

தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கோ.சி.மணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+