துபாயில் துஆக்கள் நூல் வெளியீட்டு விழா
துபாய்:துபாயில் அரிய துஆக்கள் நிறைந்த அல்முன்ஜியாத் என்ற நூல் வெளியிடப்பட்டது.
துபாய் இடிஏ அஸ்கான் சமுதாயக் கூடத்தில் டாக்டர் தைக்கா ஷூஐபு ஆலிம் அவர்களால் தொகுக்கப்பட்ட இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு இடிஏ அஸ்கான் குழும இயக்குநர் அல்ஹாஜ் ஆரிஃப் எம்.ரஹ்மான் தலைமை வகித்தார். துபாய் ஈமான் அமைப்பின் தலைவரும், பிரவாஸி பாரதிய சம்மன் எனும் வெளிநாடு வாழ் இந்தியருக்கான சிறப்பு விருதைப் பெற்றவருமான இடிஏ அஸ்கான் குழும நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம். சலாஹூத்தீன், அல்முன்ஜியாத் நூலை வெளியிட்டார்.
முதல் பிரதியை அல்ஹாஜ் நூருல் ஹக் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் ஸ்கை குழும இயக்குநர் சையது அப்துல் காதிர், ஆலிம் செல்வர் அஹ்மது ஷம்சுதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், முஹம்மது மஃரூப் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
டாக்டர் தைக்கா ஷூஐபு ஆலிம் இந்தியாவின் தலைசிறந்த அரபி மொழி அறிஞர் எனும் விருதினைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications