கோவை லாட்ஜில் பெண் கழுத்தை அறுத்துகொலை: துணை நடிகையா?
கோவை:கோவையில் லாட்ஜில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிய வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலுள்ள லாட்ஜ் ஒன்றில் நேற்று முன்தினம் ஒரு வாலிபரும் பெண்ணும் தங்கினர். தொழில் விஷயமாக கோவை வந்திருப்பதாக கூறிய அந்த வாலிபர் தன் பெயர் விஜய்(34) என்றும், தன்னுடன் வந்திருப்பது தன் மனைவி என்றும் கூறினார்.
ஒரு நாள் மட்டும் தங்க அறை வேண்டும் என கேட்டுள்ளார்.
நேற்று மாலை வெளியே சென்ற வாலிபர் நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறை கதவை திறந்து பார்த்தனர்.
அங்கு வாலிபருடன் வந்திருந்த பெண் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடல் முழுவதும் கத்திக் குத்து காயங்கள் இருந்தன. கழுத்தும் அறுப்பட்டடிருந்தது.
இதையடுத்து காட்டூர் காவல் நிலையத்திற்கு ஊழியர்கள் உடனே தகவல் கொடுத்தனர். போலீஸார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவ நடந்த அறையை சோதனை செய்த போது, கவிதா என எழுத்தப்பட்ட துண்டு சீட்டு கிடைத்தது.
லாட்ஜி ரிஜிஸ்தரில் சென்னை வடபழனி வளசரவாக்கம் எஸ்.ஆர்.ரோடு என அவர்கள் முகவரி கொடுத்திருந்ததால் போலீஸார் சென்னை வடபழனி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
கொல்லப்பட்ட பெண் துணை நடிகையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உல்லாசத்திற்காக அழைத்து வந்த வாலிபர் ஏதோ தகராற்றில் அவரை கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
வாலிபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications